சென்னை ஆவடியில் புதிதாக உதயமான பல்பொருள் அங்காடியின் திறப்பு விழாவில் கலந்துக் கொண்ட நடிகை ஸ்ருதி ஹாசன் ரசிகர்களின் தள்ளுமுள்ளு காரணமாக நிகழ்ச்சியின் பாதியிலேயே புறப்பட்டுச் சென்றார்.
நிகழ்ச்சிக்கு வந்த அவர் காரை விட்டு இறங்கியதுமே கைகளில் செல்போன்களுடன் செல்பி எடுக்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு விட்டனர். பௌன்சர்களின் உதவியுடன் கூட்டத்தை கடந்து சென்ற அவர், ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கை ஏற்றியும் கடைத்திறப்பு விழாவில் பங்கேற்றார். ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கூட்ட நெரிசல் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டதால் நடிகை ஸ்ருதிஹாசன் அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
.....